
சிலைகளால் எனக்கு பெருமையில்லை
சமாதிகளால் எனக்கு பெருமையில்லை
காதலர்களை குடும்பமாக்கியதில் பெருமையில்லை
வியாபாரங்களின் வாழ்வாதாரமென்றும் பெருமையில்லை
நீளக்கரையென்றும் பெருமையில்லை
மரபென்ற தரைப்பெயர்ந்து
உணர்வுகளின் சுனாமியாய்
வேற்றுமை மறந்து
அறவழி அலையென
மனிதர்களாய் உயர்ந்து நின்ற - உங்களை
என் கைகளிலேந்தி
உலகுக்கு உயர்த்தி
இது ஒற்றுமையின் இனமென
உங்களுள் ஒருத்தியாய் நானும் நின்றதில்
முதல் முறையாய் பெருமைப்படுகிறேன்
என்றாள் மெரினா மனிதனைப்பார்த்து
-- என ஆனந்தன் --