The inspiration behind ‘பொருமை’ revolves around the mind of an average and balanced Indian. Neither a saint nor a huntsman, he meticulously evaluates his stance and issues a cautionary statement.
What captivated me in this piece is how it gradually builds frustration, expressing underlying anger. However, it subtly conveys a message about the existence of ‘Religion’ without specifying any particular faith, allowing each reader to grasp the intended message.

எலியாரே,
எட்டனிக்கும் இச்சிங்கம்
உப்பில்லா உணவருந்தி
உணர்வில்லா நிக்குமென
துள்ளி நீர் குதிக்காதீர்
காந்தியெனும் எம் தாத்தனின்
அகிம்சை உணவூட்டியதில்
மறுகன்னம் காட்டி,காட்டி
காட்ட வேறு கன்னமின்றி
கண்கள் சிவந்து
எரிமலையாய் பொதிந்துள்ளோம்
பிரித்து விட்டால்
மதித்து வாழ்வீர்
என முன்னோர் செய்த
ஒர் தவறை
பகடைக்காயாக்கி
வேர்வை சிந்தி படித்த எம்மக்களை
ஆக்கமாய் வாழவிடாமல்
அழிவுக்கு போராட வைத்து
பிண்டமா வைக்கிரீர்
யாவரும் சமம் உம்வாய்மொழியில்
எம்மையாண்ட கலாம்,
இசை மேதை ரகுமான்
உங்களில் யார்?
உறியை நீர் தொட்டீர்
அகிம்சை எல்லைக்கோட்டை
யாம் தொட்டோம்
எழுந்து மட்டும் நின்றால்
உறியடியாய் சிந்தி சிதறுவீர்
பாரதியின் வரியாய்
மோதி யாம் மிதித்தால்
உமிழ ஓர் முகமிருக்காது
வேற்று கிரகத்தான் எட்டிப்பார்த்தால்
முகம் சுளித்து விலகிச்செல்வான் !
மதம் என்ற ஆடை
உம்மை நிலைப்படுத்த
அதை ஆயுதமாக்கி
ஏனையா அம்மணமாய் நிற்கின்றீர்?
உமக்கு இறுதி எச்சரிக்கை – சீண்டாதீர்
உமது தேசம் பாலைவனம்
என அடுத்த சந்ததி படிக்கநேரிடும்.
—–ஒரு சராசரி இந்தியன் ஆனந்தன் —–