நா.முத்து – இரங்கல்

na-muthukumar

இது கவிதையல்ல 
ஓர் இரங்கல்

அவனுக்கும் எனக்கும் 
ஓர் பனிப்போர் என்றாலும் 
அவனை மிருகமாய் 
கோபித்த சில நாட்களில் 
Aug 14, 2016 ரும் ஒர் நாள் 
வேறு யாரை  - ஆண்டவனை.

ஆம் என் வழியால் பிறர்க்கழுத
மற்றுமோர் நாள் 
நா.முத்து  வை குமரனாகவே 
ஆண்டவன் அழைத்துச்சென்ற 
அந்த நாள்

அவரின் சில படைப்புகளை 
மட்டுமே கடந்த நான் 
உறைந்து நின்ற வரிகள் 
தேசிய விருது பெற்ற
பாடல்களுக்கல்ல 
ஒரு மகனாய்  தந்தையின் 
பாசத்தை உணர்த்திய 
இவ்வரிகளுக்காக. ...

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே 
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா 
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா 
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
........
........
.........
வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம் 
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் 
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை "

ஜயா ஆண்டவா 
உன்னை மன்றாடிக்கேட்கிறேன்
படைப்பாளிகளை வாழ
விட்டுத்தொலையும்

அன்னாரின் ஆத்மா 
சாந்தியடைய வேறு வழியின்றி
உன்னையே வேண்டும் நான்
               -----என்று ஆனந்தன் -----

 

Leave a comment