தமிழ் Film directors – a tribute with a salute

The following content is a tribute to all Tamil film directors who have consistently made a difference. This difference lies in their ability to reach a global audience and provoke thoughtful reflections. My memory recalls this trend dating back to the 1970s and onwards.

         
movie_snap
மகேந்திரன் - உறவுகளின் பாசத்தை வெளிச்சத்துக்கு கெணர்ந்தவர்
இவரின் "முள்ளும் மலரும்",  பூச்சூடவேண்டிய வாடா மலர்

பாலச்சந்தர் - இயக்குனர் சிகரம் மட்டுமின்றி , 
கலைஞர்களை கண்டெடுத்த கலைமாமணி
இவரின் "தண்ணீர் தண்ணீர்" இன்றும் தாகம் தீர்க்கும்

பாரதிராஜா - கிராமிய வாடையை நெடியின்றி அளித்தவர்
இவரின் "கிழக்கே போகும் ரயில்" இன்றும்  கிராமத்து விருந்து

பாலுமகேந்திரா -  காதல் தரைமுட்டாத ஆழம் என்ற காதல் கள்வன்
இவரின் "மூன்றாம் பிறை" அம்மாவாசையின் மழுநிலவு

விசு -  நான்கு சுவர்களுக்குள் இருக்கும் நான்கு கோடி உணர்வுகளை திரையில்
உணர்த்தியவர். 
இவரின் "சம்சாரம் அது மின்சாரம்" படமல்ல பாடம்

கமல் - படைப்பு பாதி துடைப்பு பாதியென வியக்க வைத்த உழைப்பாளி
இவரின் "Hey Ram"  பிரிவினையின்  பாடம்

மணி- தமிழ் திறைக்கு "class"  என்ற இரத்தினத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் 
இவரின் "கன்னத்தில் முத்தமிட்டால்" மறு கன்னத்தையும் காட்டச்சொல்லும்

சேரன் - இருக்கமான உணர்வுகளுக்கு தண்ணீர் தெளித்தவர்
இவரின்  "Autograph" பல இளைஞர்களின் கண்ணாடி

ஷங்கர் - பிரம்மாண்டத்தின் பிரம்மா
இவரின் "முதல்வனால்" சராசரி மனிதனும் சிந்தித்தான்

பாலா -  பாலுமகேந்திரா என்ற துரோனரை மிஞ்சிய கொடூற சிஷ்யன் 
இவரின் "பிதாமகன்" மொழிகளுகக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் படைப்பு

வாசுதேவ மேனன் - சுயசரிதையின் தந்தை 
இவரின் "வாரணம் ஆயிரம்" வாழ்வின் வர்ணங்களை சித்தரித்த சரிதம்

மிஷ்கின்  - variety யின் விஞ்ஞானி
இவரின் "ஓனாயும் ஆட்டுக்குட்டியும்" தமிழின் Bourne Ultimatum.

வெற்றிமாரன் - நம் அன்றாட வாழ்வின் இருட்டான தருணங்களை அவர் ஆடுகளங்களில் ஒளியில் காட்டியவர் 
இவரது "விசாரனை" தமிழ் திரையை உலக அரங்கில் ஓரு கட்டம் மேல்நோக்கி 
நகர்த்திய படம்.
இவர்களுடன்  இவ்வரிசையில் சேர தயாராகும் என் மைத்துணனுக்காக  
                                                      ----- ஆனந்தன் -----

Leave a comment